கவனம் சிதறாமல்
கண்களை சிமிட்டாமல்
காத்துக்கொண்டு இருந்தான்
அவள் கைகள் என்ன வரையுமோ -அல்லது
என்னை வரையுமோ என்று
எண்ணங்கள் அலைபாய
அதன் வண்ணங்கள் அலையாக
காற்றை போல அவள் கைகள் வருடியது
கற்பனைகளை படையலிட்டது
எங்கு இருந்தும் துவங்கவில்லை
அவன் நெற்றியிலிருந்து துவங்கினால்
முத்தான ஒரு துவக்கம்
இடமிருந்து வலம்- அவன்
தேகம் முழுவதும் அவள் படர்ந்தால்
கற்பனைகளை அணிவகுத்தால்
தென்றல் தீண்டிட
சாரல் அடிதிட
கண்கள் மோதிட
கைகள் வருடிட
கவிதை ஒன்று பிறந்தது
கலைமகள் தீண்டிட
காகிதமாய் இருப்பதும்
ஒரு போதை தான் என்று உணர்ந்தான்.